வைஷாலி வாசகர் வட்டம்

FREE JOBS - JUST CLICK HEAR

Monday 26 September 2016

படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- செப்டம்பர்-2016-புரட்டாசி-போட்டி என்-06.


படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- செப்டம்பர்-2016-புரட்டாசி-பெரியோர்களின் ஆசிபெறும் மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-06.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-10-2016 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடைஎழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-5 ஆவணி -மாத இதழின் சகோதர, சகோதரிகள் மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-05.("ரக்ஷா பந்தன் - சகோதர சகோதரி வாழ்த்துக்கள்")6-ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,
1. ராக்கி கயிறு, 2. பரிசு, 3. கையில் லட்டு, 4. தலையில் பூ, 5. சகோதரன் கையில் ராக்கி, 6. தட்டில் தின்பண்டம்.

சரியான விடையை 31 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=11, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=14, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=03, ஹிந்தி மொழியில்=03 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்.... http://gulkanthu.blogspot.com/

தாத்தா பாட்டிகள் உள்ள வீடு" ஆயிரக்கணக்கான புத்தகங்களை கொண்ட நூலகத்திற்கு சமம் !


தாத்தா பாட்டிகள் உள்ள வீடு" ஆயிரக்கணக்கான புத்தகங்களை கொண்ட நூலகத்திற்கு சமம் ! 

செப்டம்பர்18 - உலக அறிவாளர் தினமான 18-09-2016 அன்று புரட்டாசி மாத வாசகர் வட்டத்தின் :-31வது சந்திப்பில், 

முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தொடர்ந்து செப்டம்பர்18 - உலக அறிவாளர் தினம் பற்றியும், ஆன்றோர்கள் / சான்றோர்கள் / பெரியோர்களின் அறிவுரைகளையும் ஆசிகளையும் பெற்று வாழ்க்கையை வளப்படுத்தும் புரட்டாசி மாதத்தின் சிறப்புக்கள் பற்றியும் ஒரு அலசல்.... 

தொடர்ந்து வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பின் எங்கவீட்டு நூலகம், படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் (தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்) மற்றும் இந்த மாத தலைப்பைச் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்... என நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்தது..........



மேலும் புரட்டாசி  மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்.... http://gulkanthu.blogspot.com/



நன்றி வைஷாலி வாசகர் வட்டம்.

Saturday 10 September 2016

குடிசைப்பகுதியில் 3ம் வகுப்பு மாணவியின் நூலகம் :-

குடிசைப்பகுதியில் 3ம் வகுப்பு மாணவியின் நூலகம் :-

இந்தியாவின், மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் போபால் நகரில் உள்ள அரேரா குன்று அருகேயுள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி முஸ்கான் ஹ்ரிவார். மூன்றாம் வகுப்பில் படிக்கும் முஸ்கான், தனது வீட்டில் நூலகத்தை நிறுவி செயல்படுத்திவருகிறார். அவருக்கு வைஷாலி வாசகர் வட்டத்தின் சார்பாக 50 சிறுவர் கதை புத்தகங்களை பரிசாக அனுப்பிவைக்க முடிவுசெய்துள்ளோம்.
மூன்றாம் வகுப்பில் படிக்கும் முஸ்கான், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், வீட்டின் வாசலில் நூறறுக்கும் அதிகமான புத்தகங்களை கடைவிரித்து, அப்பகுதியில் உள்ள எழுத்தறிவில்லாத பிள்ளைகளுக்கு எழுத்தறிவிக்கும் ‘இறைவி’யாக மாறிவிடுகிறார்.

அப்பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கூடம் ஒன்று நன்கொடையாக அளித்த 25 புத்தகங்களை கொண்டு தனது வீட்டின் வாசலில் கடந்த ஆண்டு ஒரு சிறிய நூலகத்தை முஸ்கான் ஆரம்பித்தார்.

அந்த புத்தகங்களில் உள்ள ராஜா-ராணி கதைகள் மற்றும் நமது தாய்நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை கதை வடிவில் தனது மழலை மொழியில் படிப்பறிவில்லாத அப்பகுதி பிள்ளைகளுக்கு கற்பிக்கும் முஸ்கானிடம் தற்போது நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.

படிக்க தெரிந்த சில சிறுவர் - சிறுமியர் இந்த கட்டணமில்லாத நூலகத்தில் இருந்து புத்தகங்களை இரவலாக கொண்டுசென்று, வாசித்துவிட்டு, மறுநாள் கொண்டுவந்து திருப்பி தந்துவிட்டு, வேறு புத்தகங்களை கொண்டு செல்கின்றனர்.

வேறு சிலர் முஸ்கான் வீட்டு வாசலிலேயே அமர்ந்து படித்துவிட்டு, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவரிடம் விளக்கம் கேட்டு தெளிவு பெறுகின்றனர்.

நன்றாக படித்து, எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் என்பதுதான் எனது எதிர்கால இலட்சியம் என்று கூறும் மஸ்கானின் கல்வித் தொண்டை பாராட்டி மத்திய அரசின் சார்பில் விரைவில் இவருக்கு நித்தி ஆயோக் திட்டத்தின்கீழ் ‘சிந்தனை தலைவர்’ பட்டம் வழங்கப்படவுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இந்த சிறு வயதிலேயே சமூக மாற்றத்துக்காக பாடுபடும் முஸ்கானின் சேவை எங்களை பெருமைப்படுத்தியுள்ளது என இவரது தாயார் திருமதி மாயா அவர்கள் கூறியதை போல ஒவ்வொரு மாணவ மாணவியரும் அவர்களால் முடிந்த அளவில் அவர்களின் வீட்டிலேயே ஒரு நூலகத்தை நிறுவி நாட்டுக்கும் வீட்டிற்கும் பெருமைசேர்க்கவேண்டும்.

நன்றிகளுடன் வைஷாலி வாசகர் வட்டம்.

Wednesday 7 September 2016

18-09-2016 உலக அறிவாளர் தினம், வைஷாலி வாசகர்வட்ட 31வது சந்திப்பு

கற்க கசடற….!!                               !! வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
____________________________________________________________
NCR-NEW DELHI -வைஷாலி வாசகர்வட்ட 31வது சந்திப்பு வரும் செப்டம்பர்-18 - உலக அறிவாளர் தினமான 18-09-2016 தேதி 3வது ஞயிறு அன்றய  புரட்டாசி மாதம்:- ஆன்றோர்கள் / சான்றோர்கள் / பெரியோர்களின் அறிவுரைகளையும் ஆசிகளையும் பெற்று வாழ்க்கையை வளப்படுத்தும் மாதக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், நமது  வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 04.00 மணிக்கு தொடங்கும்... 

செப்டம்பர்18 - உலக அறிவாளர் தினமான 18-09-2016 அன்று  புரட்டாசி மாதம்:- ஆன்றோர்கள் / சான்றோர்கள் / பெரியோர்களின் அறிவுரைகளையும் ஆசிகளையும் பெற்று வாழ்க்கையை வளப்படுத்தும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும். 
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் எங்க வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
தொடர்ந்து ......இந்த மாத தலைப்பைச் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும் ...

-மேலும் சிறப்பு விருந்தினர் உரையாடல், நமது வாழ்க்கையை வளமாக்க வழிநடத்திச்சென்ற பெரியவர்கள் என  பல சுவையான விவரங்களுக்கு வாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 31வது வாசகர் வட்ட சந்திப்பு 18-09-2016 தேதி 3வது ஞயிறு அன்று.

# வழக்காடு மன்றம் அல்லது பட்டி மன்றம். அல்லது குழுப் போட்ட அல்லது ஏட்டிக்குப் போட்டி.

# "வை.வா.வி.வ- இனைய வலைப்பதிவர் பூவிதழ் பக்கம் " "குல்கந்து"- இதழின் இந்த மாத ஆசிரியர்?  படைப்பாளர் பக்கம் பகுதி....

# சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 
1. நமது வாசகர் வட்ட சந்திப்பின் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபெற்று பரிசினை வெல்லுங்கள்.
2. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு இதழின்  6-வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள்.
3. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு போட்டிக் கேள்வியின் சரியான விடை கூறி பரிசினை வெல்லுங்கள்.
4. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு கதையின் தொடர்ச்சியான "மீதிக் கதையைக்" கூறி பரிசினை வெல்லுங்கள்.
5. எனக்குப் பிடித்த எழுத்தாளர் பகுதியில், கதை / கவிதைப்  புத்தக விமர்சனங்களைக் கூறி பதிப்பாளர்களின் பணமுடிப்பு பரிசைப் பெறுங்கள்.
6. ஒவ்வொரு மாதமும் 3-வது  ஞயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு குலுக்கல் முறையில் திடீர் அதிர்ஷ்ட பரிசுகளை வெல்லுங்கள்.  மேலும் பல பரிசுகளும் உண்டு... 

பின் குறிப்பு :- அனைத்து பரிசுகளும் வாசகர் வட்ட சந்திப்பில் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.   

அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?
உதவி மற்றும் விவரங்களுக்கு (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்.

Sunday 21 August 2016

பறவை நோக்குதலில் (Bird Watching) உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? இதோ உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு.......

பறவை நோக்குதலில் (Bird Watching) உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? இதோ உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு....... 

வருகிற 04 செப்டம்பர் (04-09-2016) ஞாயிறு அன்று "நமது அவ்வை தமிழ்ச்சங்கமும்", NCR-NEW DELHI-வைஷாலி வாசகர் வட்டமும் இணைந்து,  வைசாலி திரு.வி.சுப்ரமண்யம், ஆராய்ச்சியாளர்-பறவை நோக்குதல் (Bird Watching & Research), மற்றும் புது தில்லி அதன் சுற்றுப்புற வட்டத்தின் "ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு  குழு உறூப்பினர்"அவர்களின் தலைமை வழிகாட்டுதலின்படி, பறவைகள் நோக்குதல்  மற்றும் கணக்கெடுப்பது பற்றிய இலவச விழிப்புணர்வு பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்களில், தேர்ந்தெடுக்கப்படும் 25 நபர் கொண்ட ஒரு குழு மட்டும் 04-09-2016 அன்று புதுதில்லியின் "தில்லி-ஒக்லா பறவைகள் சரணாலயத்தில்- DELHI-'OKHLA' BIRDS SANCTUARY" விடியற்காலை 6 மணியிலிருந்து மதியம் -11 மணி வரை சிறப்பு பயிற்சியளிக்க இருப்பதால், தங்களது விருப்பத்தை கீழ் கண்ட தொலைப்பேசியின் வழியிலோ அல்லது மின் அஞ்சலிலோ 30-08-2016 முன்பாக தொடர்புகொண்டு தெரியப்படுத்தவேண்டும்.

பயிற்சி விதிமுறைகள்:-
1. பறவை நோக்குதலில் "அமைதி காப்பது" மற்றும் "பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது மிக மிக அவசியம் என்பதால் " மிக அதிக தூரம் கரடு முரடான காட்டுப் பாதையில் நடக்கவேண்டியிருப்பதால்" பல பாதுகாப்பு அம்சங்களை அவசியம் தெரிந்துகொண்டு அவற்றை பின்பற்றவேண்டும் என்பதால், முதல் 15நிமிடம் பாதுகாப்பு விதிமுறை பற்றிய பயிற்சியளிக்கப்படும்.
    
2. பயிற்சியில் கலந்துகொள்பவர்கள், உடல் முழுதும் பாதுகாப்பாக மூடியிருக்கும் வகையில், முழு கை சட்டையையும், முழு கால் மூடிய நிலையில் அணியும் உடையை அணியவேண்டும்.

3. அணியும் உடைகள் மெல்லிய வெளிர் நிறத்திலான வண்ண உடைகளை அணியவேண்டும், (பறவைகள் பயந்து விரட்டும் அடர்ந்த நிற உடைகளை தவிர்க்கவேண்டும். மேலும்  வெண்மை நிற உடையையும் தவிர்க்கவும்).

4. கரடு முரடான வனப்பகுதி என்பதால் கால்களில், பாதம் முழுதும் மூடும் வகையிலான காலணி அணியவேண்டும் (அதாவது பயிற்சி காலணி அல்லது விளையாட்டுக் காலணி (Can wash-sports-shoes) அணியவேண்டும்)    

4. மூன்று  மணி நேரம் வனப்பகுதியில் சுற்றுவதர்க்குத் தேவையான தண்ணீர் மற்றும் எளிய சக்திதரும் உணவுப்பொருள்களை கைப்பையில் உடன் எடுத்துவரவேண்டும். 

5. விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்கி மற்றும் புகைப்பட கருவிகளை எடுத்துவரலாம்.

6. சொந்த வாகனங்களில் வருபவர்கள், பறவைகள் சரணாலயத்தின் நுழைவாயிலில் வாகன நுழைவு சீட்டு மற்றும்  நிறுத்துமிட கட்டணம் செலுத்தி, அதற்க்கான சீட்டை பெற்றுக்கொள்வது அவசியம்.      

7. சரணாலயத்தின் நுழைவாயிலுக்கு 6.15am நிமிடங்களுக்குப் பிறகு வருபவர்கள் பயிற்சியில் இடம்பெரமுடியாது என்பதை கருத்தில் கொள்ளவும்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி:- "கிழக்கு தில்லியின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும்":- 

1. வைஷாலி மற்றும் வசுந்தரா பகுதியில் வசிப்பவர்கள் :- திரு.கோபால கிருஷ்ணன்(Mr. Gopalkrishnan) +91-9717236514. மற்றும் திரு வி. சுப்பிரமணியம்(Mr. V.Subramanyam) +91-9868216038.  என்கிற தொலைபேசி என்னில் தொடர்புகொள்ளவேண்டும்.  

2. இந்திராபுரம் மற்றும் நொய்டா பகுதியில் வசிப்பவர்கள்:- நொய்டா(N.O.I.D.A) பகுதியில் வசிப்பவர்கள்:- அவ்வை தமிழ் சங்கம்:- மருத்துவர் ஆர். வளவன்(Dr.R.Valavan) +91-9312309186. என்கிற தொலைபேசி என்னில் தொடர்புகொள்ளவேண்டும்.

4.தொடர்புகொள்ளவேண்டிய மின் அஞ்சல் /E_mail:- "VAISHALIREADERSCIRCLE@GMAIL.COM" (or) "AVVAITAMILSANGAM@GMAIL.COM"

பறவை நோக்குதலின் பயன்கள்:- 
பறவைகளைப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகள், மற்றும் திட்டங்களில், பறவைகள் கணக்கெடுப்பு சேவைப் பனி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

சர்வதேச அளவிலான இந்தக் கணக்கெடுப்புக்கு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (கிரேட் பேக்யார்டு பேர்டு கவுன்ட்) என்று பெயர். ஃபிப்ரவரி 14 முதல் 17 வரை (வெள்ளி முதல் திங்கள் வரை) இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபடுவதற்கு நீங்கள் பெரிதாக மெனக்கெட வேண்டியது இல்லை. பறவை நோக்குதலில் ஆர்வம் இருந்தால் போதும். உங்கள் வீட்டு மாடி, புழக்கடை, முன்புறம் உள்ள தோட்டம், வீட்டுக்கு அருகில் உள்ள பூங்கா, ஏரி, நீர்நிலை போன்ற இயற்கை செழிக்கும் ஏதாவது ஒரு இடம் போதும்.

குறைந்தபட்சம் 15 நிமிடங்கள், அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பறவை களைக் கண்காணித்து, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். நீங்கள் பார்த்த பறவை வகைகள், அவற்றின் எண்ணிக்கை போன்ற வற்றைக் குறித்துக்கொள்வது அவசியம். எல்லாப் பறவைகளையும் அடையாளம் காண முடியாவிட்டாலும் பரவாயில்லை, உங்களால் கண்டுபிடிக்க முடிந்த பறவை வகைகளைப் பதிவு செய்தால் போதும்.

இந்தக் கணக்கெடுப்பு பல்வேறு முக்கியக் கேள்விகளுக்கு விடையளிக்க உதவும். இந்தியாவில் உள்ள பறவைகளின் நிலைமையை இந்தக் கணக்கெடுப்பு மூலம் புரிந்துகொள்ளலாம். வாழிட மாறுதல்களால் பறவைகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன, தட்பவெப்பநிலை மாற்றங்கள், பறவைகளின் எண்ணிக்கையும் பரவலும் மாறுகின்றனவா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

இந்தத் திட்டம் மூலம் விஞ்ஞானிகளுக்கான ஆராய்ச்சித் தகவல்களை ஆர்வலர்களும் திரட்டித் தர முடிகிறது. இந்தக் கணக்கெடுப்பு உலகின் மிகப் பெரிய மக்கள் அறிவியல் திட்டங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்தக் கணக்கெடுப்பில் 141 நாடுகள் பங்கேற்றன. 5.5 கோடி பறவை நோக்கர்கள் 5,000+ பறவை வகைகளைப் பதிவு செய்திருந்தார்கள். இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட பறவைகள் பற்றி 400க்கும் மேற்பட்ட பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதில் 89 பட்டியல்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. அது நாட்டிலேயே இரண்டாவது அதிகப் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் பறவை பற்றிய பதிவுகளை www.BirdCount.org இல் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு இந்த இணையப் பக்கத்தைப்  பாருங்கள்: gbbc.birdcount.org.

அன்புடன் கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்.
"வைஷாலி வாசகர் வட்டம்"(http://vaishalireaderscircle.blogspot.in/)
"சுட்டீஸ்- குல்கந்து" வலைப்பதிவர் இதழ்..  http://gulkanthu.blogspot.in/

இன்று (21-08-2016) ஆவணி மாத வாசகர் வட்டத்தின் :-30வது சந்திப்பில்

இன்று  (21-08-2016) ஆவணி மாத வாசகர் வட்டத்தின் :-30வது சந்திப்பில் 

முதலில் ஈரோடு புத்தகத்த திருவிழா பற்றி ஒரு அலசல் .....(கண்காட்சி/எழுத்தாளர்கள் / பதிப்பாளர்கள் / வாசகர்கள்)..... தொடர்ந்து எங்கவீட்டு நூலகம் மற்றும் இந்த மாத தலைப்பையொட்டிய சகோதர சகோதரிகள் மாதக் கொண்டாட்டங்கள், போட்டிகள், பரிசுகள் என நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்தது.......... விவரங்களுக்கு சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவர் இதழில்..  http://gulkanthu.blogspot.in/

Friday 19 August 2016

6/ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 71 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர்....

சென்றமாத 6/ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை:- 

சரியான விடையை 71 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர். சென்ற மாத வைஷாலி வாசகர்வட்ட "சுட்டீஸ் குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழ்-4 ஆடி -மாத இதழின் (குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா?) 6-ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை, 
1)தலையில் இரண்டு மயிலிறகு 
2)புல்லாங்குழல் பட்டுக்கயிறு 
3)பூ மாலை 
4)பசுங்கன்று கழுத்தில் மணி 
5)பசுங்கன்றின் தலை நெற்றிப்பொட்டு 
6)பசுங்கன்றின் வால்.

சரியான விடையை 71 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், 
தமிழில் விடை எழுதியவர்கள்=31, 
ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=17, 
ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=20, 
ஹிந்தி மொழியில்=02 நபர்களும், 
தெலுங்கு மொழியில்=01 நபரும், 

மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். 

சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் 21-08-2016 அன்றய நமது 30வது வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும். 

நன்றி... வைஷாலி வாசகர் வட்டம்.