வைஷாலி வாசகர் வட்டம்: October 2016

FREE JOBS - JUST CLICK HEAR

Wednesday 19 October 2016

ஏன் தீபாவளி? பட்டாசு வெடிப்பது எதனால்?

ஏன் தீபாவளி? பட்டாசு வெடிப்பது எதனால்?

#தீபாவ‌ளியை நரக சது‌ர்‌தசி எ‌ன்று‌ம் அழை‌ப்பா‌ர்க‌ள். ஐ‌‌ப்ப‌சி மாத‌த்‌தி‌ல் சூ‌ரிய‌ன் துலா ராசி‌யி‌ல் இரு‌ப்பார். அ‌ப்போது தே‌ய் ‌பிறையான (‌கிரு‌ஷ்ண ப‌ட்ச‌ம்) 14ஆ‌ம் நா‌ளி‌ல் கொ‌ண்டாட‌ப்படு‌ம். ‌தி‌ரியோத‌சி இரவு சது‌ர்த‌சி காலை கொ‌ண்டாட‌ப் பெறுவ‌தினா‌ல் இத‌ற்கு நரக சது‌ர்‌த்த‌சி எ‌ன்று வழ‌ங்க‌ப்படு‌கிறது.


#தீபாவ‌ளி எ‌ன்றா‌ல் ‌‌தீப‌ங்க‌ளி‌ன் வ‌ரிசை எ‌ன்று பொரு‌ள் உ‌ண்டு. ராம‌பிரா‌ன் இல‌‌ங்கை செ‌ன்று ராவணனோடு கடு‌ம் போ‌ர் பு‌ரி‌ந்து, தனது இ‌ல்லாளான ‌(மனை‌வி) சீதா ‌பிரா‌ட்டியாரை ‌மீ‌ட்டு‌க் கொ‌ண்டு அயோ‌த்‌தி‌க்கு ‌திரு‌‌‌ம்‌பி வ‌ந்தா‌ர். த‌ன் வனவாச‌ம் முடி‌ந்து நா‌ட்டை ஆள வரு‌ம் வெ‌ற்‌றி ‌வீர‌ர் ராமரை வரவே‌ற்க ம‌க்க‌ள் ‌மிகவு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியாக ‌தீப‌ங்களை ஏ‌ற்‌றி கொ‌ண்டாடினா‌ர்க‌ள். அதனா‌ல்தா‌ன் ‌தீபாவ‌‌ளி அ‌ன்று ‌திரு‌விள‌க்குகளை வரிசையாக ஏ‌ற்‌றி வை‌க்கு‌ம் வழ‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக கூறுவா‌ர்க‌‌ள்.


#இற‌க்கு‌‌ம் ‌நிலை‌யி‌ல் இரு‌ந்த நரகாசுர‌ன், ஸ்ரீ கிரு‌ஷ்ண‌னி‌ன் காலை ‌பிடித்துக்கொண்டு, பகவானே எ‌ன்னுடைய சாவு கெ‌ட்டவ‌ர்களு‌க்கு ஒரு பாடமாக இரு‌க்க வே‌ண்டு‌ம். கொடியவனாக நா‌ன் இற‌க்கு‌ம் இ‌ந்நாளை ம‌க்க‌ள் அனைவரு‌ம் அ‌‌ல்ல‌ல் ‌நீ‌ங்‌கிய ந‌ன்நாளாக ம‌ங்களகரமான நாளாக கொ‌‌ண்டாடி ம‌கிழ வே‌ண்டு‌ம் எ‌ன்று வே‌ண்டினா‌ன். ‌கிரு‌ஷ்ண பகவானு‌ம் அ‌வ்வாறே அவனு‌க்கு அரு‌ளினா‌ர். இதனா‌ல் தா‌ன் நரகாசுர‌ன் இ‌ற‌ந்த நாளை‌த்தா‌ன் ‌தீபாவ‌ளியாக கொ‌‌ண்டாடி வரு‌கி‌ன்றன‌ர் எ‌‌ன்று ஜ‌தீக‌ம் கூறு‌கிறது. 

#துலாம் மாதத்தில் வரக்கூடிய சதுர்தசி திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சதுர்தசி திதியும், அமாவாசையும் இணைந்த நேரத்தில்தான் நரகாசுர வதம் நடந்தது என புராணங்கள் கூறுகின்றன. எனவே சதுர்தசி, அமாவாசை சந்திக்கும் நேரமே அல்லது நாளே தீபாவளி கொண்டாடுவதற்கு உகந்த நாளாகும். 

#மேலும் பாட்டசை வெடிப்பது எதனால்-

ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகாசுரனின் தலையை துண்டித்தபோது மிகப்பெரிய பிரகாசமான வெளிச்சம் தோன்றியதாம், அதாவது கெட்டவைகள் அழிந்து மிகப்பிரகாசமான நல்லவை பிறந்தது என்று பொருள்படும் விதமாக பட்டாசை வெடித்து அதுபோன்ற ஒரு காட்சியை நாமும் கண்டு களித்திடவே... பட்டாசு வெடி வெடிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.


இந்த வருடத்தின் 29-10-2016 அன்றய  இனிய தீபாவளி நாளில் மகிழ்ச்சி பொங்கி, என்றென்றும் இன்பம் தழைக்கட்டும் என வைஷாலி வாசகர் வட்டத்தின் சார்பாக எங்களது இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

”சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “ வாசகர் வட்டத்தின் :-32வது சந்திப்பில்

அக்டொபர்-31, உலக சிக்கன தினம் (Word Thrift Day). வைஷாலி வாசகர் வட்ட 32வது சந்திப்பு...16-10-2016 ஐப்பசி மாதம் -சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்... 

”சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “

"சேமிப்பு பழக்கத்தை முதலில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்பு பழக்கம் என்பதை, முதலில் கற்றுத்தரும் பாடமாக இருக்கவேண்டும்."  

NCR-NEW DELHI-வைசாலி வாசகர் வட்டத்தின் (16-10-2016):-32வது சந்திப்பில் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தொடர்ந்து அக்டொபர்-31, உலக சிக்கன தினம் (Word Thrift Day). ஐப்பசி மாதம் -சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்.. வாழ்க்கையை வளமாக்கும் உலக சிக்கன தினத்தின் (Word Thrift Day). சிறப்புக்கள் பற்றியும் ஒரு அலசல்.... 



தொடர்ந்து வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பின் எங்கவீட்டு நூலகம்,  படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் (தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்) மற்றும் இந்த மாத தலைப்பைச் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்...  என நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்தது..........

29-10-2016- இந்த ஆண்டின் இனிய தீபாவளி நாளில் மகிழ்ச்சி பொங்கி, என்றென்றும் இன்பம் தழைக்கட்டும் என வைஷாலி வாசகர் வட்டத்தின் சார்பாக எங்களது இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்.... http://gulkanthu.blogspot.com/



நன்றி வைஷாலி வாசகர் வட்டம்.

படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- அக்டொபர்-2016-ஐப்பசி-மாதம் தண்ணீர் சிக்கனமும் சேமிப்பும்

வைஷாலி வாசகர் வட்டத்தின் "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-7 ஐப்பசி மாத சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... 

"சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டம்" படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- அக்டொபர்-2016-ஐப்பசி-மாதம் தண்ணீர் சிக்கனமும் சேமிப்பும் , வலைப்பதிவு இதழ் போட்டி என்-07.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-11-2016 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-6 செப்டம்பர்-2016-புரட்டாசி-மாத இதழின் பெரியோர்களின் ஆசிபெறும் மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-06. ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,
1. ஆசீர்வதிக்கும் பெரியவரின் நெற்றி குங்கும பொட்டு, 2. ஆசீர்வதிக்கும் தாயாரின் புடவை ஒர (பார்டர்) நிறம், 3.தாயாரின் காது வைர தோடு,  4. ஆசி பெரும் மகனின் மூக்கு கண்ணாடி, 5) ஆசி பெரும் மருமகளின் கை ரவிக்கை நிறம், 6.மாவிலைத் தோரணங்கள் எண்ணிக்கை.
சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 57 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=36, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=14, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=05, ஹிந்தி மொழியில்=02 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்.


Tuesday 4 October 2016

உலக சிக்கன தினம் (Word Thrift Day) சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்... வைஷாலி வாசகர் வட்ட 32வது சந்திப்பு...

கற்க கசடற….!!                               !! வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
____________________________________________________________
NCR-NEW DELHI -வைஷாலி வாசகர்வட்ட 32வது சந்திப்பு வரும் அக்டொபர் 16-10-2016 ஆம் தேதி 3-வது ஞயிறு அன்றய  ஐப்பசி மாதம்:- சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், நமது  வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Delhi Metro Railway Station-VAISHALI-Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 04.00 மணிக்கு தொடங்கும்... 
அக்டொபர்-31, உலக சிக்கன தினம் (Word Thrift Day). வைஷாலி வாசகர் வட்ட 32வது சந்திப்பு...16-10-2016 ஐப்பசி மாதம் -சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்... 

”சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “

"சேமிப்பை முதலில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்பு பழக்கம் என்பதை, முதலில் கற்றுத்தரும் பாடமாக இருக்கவேண்டும்."

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் " படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
தொடர்ந்து ......இந்த மாத தலைப்பைச் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும் ...

-மேலும் சிறப்பு விருந்தினர் உரையாடல், நமது வாழ்க்கையை வளமாக்க சிக்கனமும் சேமிப்பும் பற்றிய  பல சுவையான விவரங்களுக்கு....  வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 32வது வாசகர் வட்ட சந்திப்பு 16-10-2016 தேதி 3வது ஞயிறு அன்று.

# வழக்காடு மன்றம் அல்லது பட்டி மன்றம். அல்லது குழுப் போட்ட அல்லது ஏட்டிக்குப் போட்டி.

# "வை.வா.வி.வ- இனைய வலைப்பதிவர் பூவிதழ் பக்கம் " "குல்கந்து"- இதழின் இந்த மாத ஆசிரியர்?  படைப்பாளர் பக்கம் பகுதி....

# சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 
1. நமது வாசகர் வட்ட சந்திப்பின் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபெற்று பரிசினை வெல்லுங்கள்.

2. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு இதழின்  6-வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள்.

3. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு போட்டிக் கேள்வியின் சரியான விடை கூறி பரிசினை வெல்லுங்கள்.

4. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு கதையின் தொடர்ச்சியான "மீதிக் கதையைக்" கூறி பரிசினை வெல்லுங்கள்.

5. எனக்குப் பிடித்த எழுத்தாளர் பகுதியில், கதை / கவிதைப்  புத்தக விமர்சனங்களைக் கூறி பதிப்பாளர்களின் பணமுடிப்பு பரிசைப் பெறுங்கள்.

6. ஒவ்வொரு மாதமும் 3-வது  ஞயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு குலுக்கல் முறையில் திடீர் அதிர்ஷ்ட பரிசுகளை வெல்லுங்கள்.  மேலும் பல பரிசுகளும் உண்டு... 


பின் குறிப்பு :- அனைத்து பரிசுகளும் வாசகர் வட்ட சந்திப்பில் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.   


அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?

உதவி மற்றும் விவரங்களுக்கு (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்.