வைஷாலி வாசகர் வட்டம்: ஏன் தீபாவளி? பட்டாசு வெடிப்பது எதனால்?

FREE JOBS - JUST CLICK HEAR

Wednesday 19 October 2016

ஏன் தீபாவளி? பட்டாசு வெடிப்பது எதனால்?

ஏன் தீபாவளி? பட்டாசு வெடிப்பது எதனால்?

#தீபாவ‌ளியை நரக சது‌ர்‌தசி எ‌ன்று‌ம் அழை‌ப்பா‌ர்க‌ள். ஐ‌‌ப்ப‌சி மாத‌த்‌தி‌ல் சூ‌ரிய‌ன் துலா ராசி‌யி‌ல் இரு‌ப்பார். அ‌ப்போது தே‌ய் ‌பிறையான (‌கிரு‌ஷ்ண ப‌ட்ச‌ம்) 14ஆ‌ம் நா‌ளி‌ல் கொ‌ண்டாட‌ப்படு‌ம். ‌தி‌ரியோத‌சி இரவு சது‌ர்த‌சி காலை கொ‌ண்டாட‌ப் பெறுவ‌தினா‌ல் இத‌ற்கு நரக சது‌ர்‌த்த‌சி எ‌ன்று வழ‌ங்க‌ப்படு‌கிறது.


#தீபாவ‌ளி எ‌ன்றா‌ல் ‌‌தீப‌ங்க‌ளி‌ன் வ‌ரிசை எ‌ன்று பொரு‌ள் உ‌ண்டு. ராம‌பிரா‌ன் இல‌‌ங்கை செ‌ன்று ராவணனோடு கடு‌ம் போ‌ர் பு‌ரி‌ந்து, தனது இ‌ல்லாளான ‌(மனை‌வி) சீதா ‌பிரா‌ட்டியாரை ‌மீ‌ட்டு‌க் கொ‌ண்டு அயோ‌த்‌தி‌க்கு ‌திரு‌‌‌ம்‌பி வ‌ந்தா‌ர். த‌ன் வனவாச‌ம் முடி‌ந்து நா‌ட்டை ஆள வரு‌ம் வெ‌ற்‌றி ‌வீர‌ர் ராமரை வரவே‌ற்க ம‌க்க‌ள் ‌மிகவு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியாக ‌தீப‌ங்களை ஏ‌ற்‌றி கொ‌ண்டாடினா‌ர்க‌ள். அதனா‌ல்தா‌ன் ‌தீபாவ‌‌ளி அ‌ன்று ‌திரு‌விள‌க்குகளை வரிசையாக ஏ‌ற்‌றி வை‌க்கு‌ம் வழ‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக கூறுவா‌ர்க‌‌ள்.


#இற‌க்கு‌‌ம் ‌நிலை‌யி‌ல் இரு‌ந்த நரகாசுர‌ன், ஸ்ரீ கிரு‌ஷ்ண‌னி‌ன் காலை ‌பிடித்துக்கொண்டு, பகவானே எ‌ன்னுடைய சாவு கெ‌ட்டவ‌ர்களு‌க்கு ஒரு பாடமாக இரு‌க்க வே‌ண்டு‌ம். கொடியவனாக நா‌ன் இற‌க்கு‌ம் இ‌ந்நாளை ம‌க்க‌ள் அனைவரு‌ம் அ‌‌ல்ல‌ல் ‌நீ‌ங்‌கிய ந‌ன்நாளாக ம‌ங்களகரமான நாளாக கொ‌‌ண்டாடி ம‌கிழ வே‌ண்டு‌ம் எ‌ன்று வே‌ண்டினா‌ன். ‌கிரு‌ஷ்ண பகவானு‌ம் அ‌வ்வாறே அவனு‌க்கு அரு‌ளினா‌ர். இதனா‌ல் தா‌ன் நரகாசுர‌ன் இ‌ற‌ந்த நாளை‌த்தா‌ன் ‌தீபாவ‌ளியாக கொ‌‌ண்டாடி வரு‌கி‌ன்றன‌ர் எ‌‌ன்று ஜ‌தீக‌ம் கூறு‌கிறது. 

#துலாம் மாதத்தில் வரக்கூடிய சதுர்தசி திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சதுர்தசி திதியும், அமாவாசையும் இணைந்த நேரத்தில்தான் நரகாசுர வதம் நடந்தது என புராணங்கள் கூறுகின்றன. எனவே சதுர்தசி, அமாவாசை சந்திக்கும் நேரமே அல்லது நாளே தீபாவளி கொண்டாடுவதற்கு உகந்த நாளாகும். 

#மேலும் பாட்டசை வெடிப்பது எதனால்-

ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகாசுரனின் தலையை துண்டித்தபோது மிகப்பெரிய பிரகாசமான வெளிச்சம் தோன்றியதாம், அதாவது கெட்டவைகள் அழிந்து மிகப்பிரகாசமான நல்லவை பிறந்தது என்று பொருள்படும் விதமாக பட்டாசை வெடித்து அதுபோன்ற ஒரு காட்சியை நாமும் கண்டு களித்திடவே... பட்டாசு வெடி வெடிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.


இந்த வருடத்தின் 29-10-2016 அன்றய  இனிய தீபாவளி நாளில் மகிழ்ச்சி பொங்கி, என்றென்றும் இன்பம் தழைக்கட்டும் என வைஷாலி வாசகர் வட்டத்தின் சார்பாக எங்களது இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment