வைஷாலி வாசகர் வட்டம்: கார்த்திகை மாதம்:- வைஷாலி வாசகர்வட்ட 33வது சந்திப்பு, புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்கள்.

FREE JOBS - JUST CLICK HEAR

Thursday 10 November 2016

கார்த்திகை மாதம்:- வைஷாலி வாசகர்வட்ட 33வது சந்திப்பு, புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்கள்.



கற்க கசடற….!!                               !! வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
____________________________________________________________
NCR-NEW DELHI -வைஷாலி வாசகர்வட்ட 33வது சந்திப்பு வரும் 20-11-2016 தேதி 3வது ஞயிறு அன்றய  கார்த்திகை மாதம்:- புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்...  நமது  வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 04.00 மணிக்கு தொடங்கும்... 

கவலைகள் தீர்க்கும் கார்த்திகை மாதம் ...கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் இல்லம்தோறும் கொண்டாடுவர்.

குமராலய தீபம் என்பது முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள். விஷ்ணுவாலய தீபம் என்பது விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள். சர்வாலய தீபம் என்பது ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி. அதாவது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில் பிரகாசமான ஒளி ஏற்றப்படுமேயானால் அவ்விடத்தில் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவு ஏற்படும். 

முன்னொரு காலத்தில் ஒரு அரசரின் அழகிய மகள், கல்வியிலும் கேள்வியிலும் சிறந்து விளங்கிய கண்கள் தெரியாத குருடரான அரசு கவிஞ்சர் மகன் மீது விருப்பம் கொண்டு, கார்த்திகை மாதத்தில் ஒரு சுபநாளில் திருக்கோவிலில் திருமணம் செய்துகொண்டார். 

மன்னருக்கு தனது மகளின் பிடிவாத திருமணம் பிடிக்காது போனதால் ,இனி அரண்மனையில் உனக்கு இடமில்லை என்று கூறியதோடு உனது வாழ்க்கைக்குத் தேவையான பொருளை பெற்றுக்கொண்டு வேறு எங்காவது சென்று வாழும்படி கூறிவிட்டார். 

அதற்க்கு மன்னரின் மகள் தமக்கு எந்த பொருளும் வேண்டாம் என்று கூறியதோடு, இன்று ஒருநாள் மட்டும் அரண்மனையிலும் இந்த நாட்டின் எவர் வீட்டிலும் விளக்குகள் ஏற்றக்கூடாது என்கிற ஒரு வேண்டுகோளை அரசரின் முன் வைத்தார்.  அதைக்கேட்ட மன்னருக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட... சரி அப்படியே ஆகட்டும் என்று கூறி,  அதற்கான  உத்தரவை செயல்படுத்துங்கள் என ஆணையிட்டார்.  

அந்த நாட்டின் எல்லையில் ஒரு குடுசை வீடை கட்டி, வீடுமுழுவதும் பசுங் கோமியம் சாணம் தெளித்து மொழுகி, வீட்டின் அனைத்து இடங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி, அந்த வீட்டின் வாசலருகே தனது கண்கள் குருடான கணவரை ஸ்ரீ லட்சுமி தேவியாரைப் துதித்து கவிபாடும்படி கூறியதோடு, என்னிடம் அனுமதி பெறாமல் எவரையும் வெளியில் செல்லவோ உள்ளே வரவோ அனுமதிக்கவேண்டாம் என்று கூறினாள்.  பிறகு வீட்டின் உள்ளே சென்று கடவுளுக்கு படைப்பதற்கான நெய்வேத்திய சாதத்தை சமைக்க துவங்கினார். 

வீட்டின் உள்ளே ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் வெளிச்சத்தை தாங்கமுடியாமல் வீட்டின் உள்ளே இருந்த கேட்ட துர் தேவதைகள் வீட்டை விட்டு வெளியேற முயன்றார்கள். அவர்களை தடுத்து நிறுத்திய தனது கணவரின் அருகே சென்ற அரசரின் மகள் அந்த துர் தேவதைகளிடம் இனி எப்போது எந்தக்காரணத்தைக் கொண்டும் இந்த வீட்டிற்குள் நுழையமாட்டோம் என்று சத்தியம் பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே விரட்டியடித்தார். 

சற்று நேரத்திற்குப் பிறகு அந்த நாட்டில் எங்கும் விளக்கு ஏற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடத்திலிருந்த நல்ல தேவதைகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஸ்ரீ மஹாலட்சுமி தேவியருடன், விளக்குகள் ஏற்றப்பட்டு புத்தொளிவுடன் பிரகாசமாக இருக்கும் அந்தக் குடுசைக்குள் நுழைய முற்பட்டார்கள். அப்போது அவர்களை வாசலில் தடுத்து நிறுத்திய  தனது கணவரின் அருகே சென்ற அரசரின் மகள் நல்ல தேவதைகளையும், ஸ்ரீ மஹாலட்சுமி தேவியாரையும் சிறப்பாக வரவேற்று இனி எப்போது எந்தக்காரணத்தைக் கொண்டும் இந்த வீட்டை விட்டு போகமாட்டோம் என்று சத்தியம் பெற்றுக்கொண்டதோடு, அவர் கணவரின் குருட்டுத்தன்மை நீங்கச் செய்து ஏராளமான செல்வங்களைப்பெற்று அந்நாட்டு மன்னரைவிட பலமடங்கு சிறப்பாக தனது வாழ்க்கையை வாழத் தொடங்கினார். 

எனவே கார்த்திகை மாதத்தில் வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றுவதால், கெட்டவர்கள் அழிந்து வீடு பிரகாசமாக ஜொலிப்பதோடு, புத்துணர்ச்சியும் பொதுப்பொலிவும் ஏற்படும். அதனால் நாம் சிறப்பாக செயல்பட்டு ஏராளமான செல்வங்களை சேர்க்கமுடியும் என்பதால், கார்த்திகை மாதத்தின் விளக்கொளியில் புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, புதியதோர் வாழ்க்கையை நாம் பெறுவதால், நமக்குத் தேவையான அனைத்துச் செல்வமும் சிறப்பும் நம்மை தேடி வரும் என்பது உறுதி. 

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
தொடர்ந்து ......
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் ...

-மேலும் சிறப்பு விருந்தினர் உரையாடல், நமது வாழ்க்கையை வளமாக்க புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்கள்... பற்றிய  பல சுவையான விவரங்களுக்கு...

வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 33வது வாசகர் வட்ட சந்திப்பு 20-11-2016 தேதி, 3-வது ஞயிறு அன்று. நமது  வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Delhi Metro Railway Station-VAISHALI-Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):- நேரம் மாலை 04.00 மணிக்கு தொடங்கும்... 

# "வை.வா.வி.வ- இனைய வலைப்பதிவர் பூவிதழ் பக்கம் " "குல்கந்து"- இதழின் இந்த மாத ஆசிரியர்?  படைப்பாளர் பக்கம் பகுதி....

# சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 
1. நமது வாசகர் வட்ட சந்திப்பின் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபெற்று பரிசினை வெல்லுங்கள்.
2. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு இதழின்  6-வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள்.
3. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு போட்டிக் கேள்வியின் சரியான விடை கூறி பரிசினை வெல்லுங்கள்.
4. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு கதையின் தொடர்ச்சியான "மீதிக் கதையைக்" கூறி பரிசினை வெல்லுங்கள்.
5. எனக்குப் பிடித்த எழுத்தாளர் பகுதியில், கதை / கவிதைப்  புத்தக விமர்சனங்களைக் கூறி பதிப்பாளர்களின் பணமுடிப்பு பரிசைப் பெறுங்கள்.
6. ஒவ்வொரு மாதமும் 3-வது  ஞயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு குலுக்கல் முறையில் திடீர் அதிர்ஷ்ட பரிசுகளை வெல்லுங்கள்.  மேலும் பல பரிசுகளும் உண்டு... 

அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?....

உதவி மற்றும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....


No comments:

Post a Comment