புது தில்லியில் ஒவ்வொரு வருடமும் (டிசம்பர் 8 முதல் 18 வரை) 08-12-2015 முதல் 18-08-2015 வரை தேசிய மாற்றுத் திறனாளிகள் வாரமாக மாற்றுத் திறனாளிகளுக்கான பல நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே வருகிற 20-12-2015 ஞயிறு அன்று, நேரம்:- மாலை 2மணியிலிருந்து 6 மணிவரை, டிசம்பர் மாத வைஷாலி வாசகர் வட்ட நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் பற்றிய அவர்களின் படைப்புகள் சார்ந்த நிகழ்ச்சியாக அமையவிருக்கிறது .....வழக்கம்போல நமது அனைத்து நிகழ்சிகளும் உண்டு.
நமது வைசாலி-(NCR-NEW DELHI) வாசகர் வட்ட உறுப்பினர்களின் சிறப்பு நிவாரண உதவி:- சென்னை மற்றும் கடலூரில், சென்ற வாரம் பெய்த கனமழையால் நகரம் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதைத் தொடர்ந்து பலரும் நிவாரண உதவி அளித்து வருகிறார்கள். நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் உறுப்பினர்கள் திருமதி மற்றும் திரு. ஹரிஹரன் (டாபர் ஹரி) அவர்கள் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரணப் பணிகளில் உதவி வருகிறார்கள். நமது வாசகர் வட்டத்தின் திரு T. V. செந்தில் குமார் (விப்ரோ) அவர்கள் தலைமையில், நமது வைஷாலி பகுதியிலிருந்து நிவாரண உதவி பொருள்களைப் பெற்று தில்லியிலிருந்து சென்னைக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார். நமது வாசகர் வட்ட உறுப்பினர்கள் பலர் தாமாகவே முன்வந்து உதவுவது மிக மகிழ்ச்சியை தருகிறது. நமது பாலவிகாஸ் மாணவர்கள் சென்னையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக்காக நோட்டு புத்தகங்கள் மற்றும் பேனா பென்சில் போன்றவற்றை தர முன்வந்துள்ளது மேலும் மகிழ்ச்சியை தருகிறது. தொடர்ந்து நம்மால் ஆனா அனைத்துவித உதவிகளையும் செய்யவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து சிறப்பான நிலையை பெற 20-12-2015 அன்று நடைபெற இருக்கும் நமது "ஐயப்ப மண்டல சிறப்பு பூஜையில்" சிறப்பு பிரார்த்தனைகளைச் செய்வோம்.
வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்-NCR-NEW DELHI.