வைஷாலி வாசகர் வட்டம்: வாசகர் வட்டத்தின் "இந்த மாத இனிய இனைய "தமிழ் பூக்கள்" பகுதியில்

FREE JOBS - JUST CLICK HEAR

Saturday 24 October 2015

வாசகர் வட்டத்தின் "இந்த மாத இனிய இனைய "தமிழ் பூக்கள்" பகுதியில்

NCR-New Delhi- வைஷாலி வாசகர் வட்டத்தின் "இந்த மாத இனிய இனைய "தமிழ் பூக்கள்" பகுதியில் (This Month Sweet Tamil, Web Site/Page & Blogs)   

இந்த மாத தொகுப்பாசிரியர் (This month Editor of this page):-செல்வி எ.கே.பவித்ரா (Ms. A.K.Pavithra Student (BBA.LLB-2nd Year-Mewar Univarsity).

(1). பரிந்துரைக்கப்பட்ட தமிழ் இணைய பக்கங்கள்  (Recommended Web site / blogs for this month):- 

1. http://cybersimman.com/ "இணைய உலகிற்கான உங்கள் சாளரம்":- இணையம் பற்றிய பல விவரங்களை தமிழில் தெரிந்துகொள்ள ஒரு இணையத்தளம்.

2. http://www.valaitamil.com/ வலைத்தமிழ்.காம் - தமிழ் தகவல் களஞ்சியம், செய்திகள், இலக்கியம், சமயம், ஆன்மிகம், சிறுவர் பகுதி, சமையல், உடல்நலம் என பலவித விவரங்களையும் தமிழில் தெரிந்துகொள்ள ஒரு வலைத்தளம்.

3. http://vaani.neechalkaran.com/ "வாணி" தமிழ் எழுத்துப்பிழை திருத்தி, தமிழில் எழுதும்போது வரும் எழுத்துப்பிழைகளை திருத்தும் தமிழ் மென்பொருள் இணையத்தளம்.(தமிழ் வழியில் பாடம் கற்காத நம்மைப்போன்றவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள பக்கம்)

4. http://tamilcube.com/news/tamil/ தமிழில் வெளிவரும் மின்னிதழ்களை அறிமுகம்:- நாளிதழ், வார இதழ், மாத இதழ் அனைத்தையும் ஒரே இனைய பக்கத்தில்.

5. http://www.w3newspapers.com/india/tamil/ (தமிழ் செய்தித்தாள்கள்) சர்வதேச அளவிலான அனைத்து தமிழ் செய்தித்தாள்களும் ஒரே இடத்தில்

6. http://www.geotamil.com/pathivukalnew/ 'கனடாவின் தமிழ் பக்கங்கள்: இணைய இதழ், வலைப்பூ, மின்னூல் மற்றும் சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை'

(II) .நாம் வசிக்கும் நமது NCR- New Delhi புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட எல்லைப்பகுதியின் இனைய "பூ" பக்க, வலைப்பதிவுகளில் இந்தமாத பிரபலமான பதிவுகள் பற்றிய தொகுப்புப் பகுதி (My Readers Circle NCR- New Delhi Web Page/Blogs for this month) :- (புது தில்லியும் அதன் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும்  மாநிலங்களில் வாழும் தமிழ் வலைப்பதிவர்களின் "இனைய "பூ" பதிவுகள்):- 

1. http://venkatnagaraj.blogspot.in/ Mr. Venkat Nagaraj,
நமது புதுதில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட மாநிலப் பகுதியின் இனைய தமிழ் "பூ" பக்கங்கள் வரிசையில், திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின் இனைய பூக்களில் இவரின் "பாப்ரி- கி.ரா"  சித்திரத் தலைப்பில், பழம் பெரும் எழுத்தாளர் கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (பிறப்பு: 1922) ... இந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் (நமது தாத்தா பாட்டி காலத்தில்) எழுதிய கலைமகள் 1951-ஆம் வருட தீபாவளி மலரில் வெளியான அருமையான "யானைக்" கதையை பகிர்ந்திருக்கிறார்...
 "யானைக் கதை" மிகவும் அருமை, திரைப்படம் பார்த்ததுபோல இருந்தது ... ... நாம் வட மொழியில் "பாப்ரி" என்று கூறுவது "ஆச்சரியம் அல்லது பிரும்மாண்டம்" என்பதாகப் பொருள்.... எழுத்தாளர் கி. ரா. அவர்கள் என்ன நினைத்து இந்த  தலைப்பைத் தந்தார் என்று தெரியவில்லை... திரு.வெங்கட் நாகராஜ் அவரின் அனைத்துப் பதிவுகளும் அப்படிப்பட்ட வியப்பைத் தரும் அருமையான பதிவுகள்......"உத்தரவாதமான சிறந்த இனைய "பூ" பக்கங்கள் மற்றும் பதிவுகளின்" வரிசையில் நமது NCR-New Delhi வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு இவரின் இனைய பூ பக்கத்தை முன்மொழிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.  

2. http://mathinanth.blogspot.in/  Mr.Sethuraman Anandakrishnan  (Anbe Aandavan) சென்னையைச்  சேர்ந்த திரு சேதுராமன் ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் "அன்பே ஆண்டவன்" என்கிற இனைய "பூ" பக்கம்.... தமிழராக இருந்தும் வடநாட்டில்/வெளிநாட்டில் படிக்கும் தமிழ்  மாணவர்கள் தமிழை வேகமாக படிக்க முடியாத நமது வாசகர் வட்ட இளைய மாணவ உறுப்பினர்களுக்கு இவரின் இனைய "பூ" பக்கம் எளிமையாக இருப்பதற்கு காரணம்  வலைப்பதிவுகளில் இவர் அதிகம் ஹிந்தி மற்றும் சமஸ்கிரத மொழிகள் பயன்படுத்துவது.
அவரின் அனைத்துப் பதிவுகளும் பல தமிழ் இலக்கிய, ஆன்மீக விவரங்களை மிக எளிய வழியில் அழகுபட அமைத்திருப்பது நமக்கு வியப்பைத் தரும் அருமையான பதிவுகள்......"உத்தரவாதமான சிறந்த இனைய பதிவுகள்" வரிசையில் நமது (புது தில்லி வட்ட)  வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு இவரின் இனைய "பூ" பக்கத்தை முன்மொழிவதில் மகிழ்ச்சியடைகிறேன். 

(III). இந்த மாத எனது பார்வையில் சர்வதேச தமிழ் வலைப்பதிவுகளில் பிரபலமான பதிவுகள் பற்றிய தொகுப்புப் பகுதி :-

1. http://pureaanmeekam.blogspot.in/"ஆன்மீகம்"  என்னும் ஆன்மீகத் தவவல்கள் நிறைந்த  தமிழ், ஆங்கிலம்,சமஸ்கிரிதம் போன்ற மொழிகளில் "கீதையின்" சாரங்களை எடுத்துரைக்கும் ஒரு வலைப்பக்கம் . This Blog is devoted to ORTHODOX, VEDIC CLUTURE, TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM. by Mr. Sury Siva.

2.  http://honeylaksh.blogspot.in/ திருமதி. தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள், சிறந்த தமிழ் கவிஞ்சர், எழுத்தாளர். அவர்களின் இந்த இனைய "பூ" பக்கம் சமுதாய சிந்தனையின் கோட்டை என்று சொல்லலாம்... அவரின் "நவராத்திரி கோலங்கள்" என்னை மிகவும் கவர்ந்தது. நமது NCR-New Delhi வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு இவரின் இனைய பூ பக்கத்தை முன்மொழிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.  

3. http://saibhajans.blogspot.in/ மதுரையைச் சேர்ந்த சாயிதாசன் திரு. விஸ்வேஷ் பாபு அவர்களின் பகவான் ஸ்ரீ சத்யா சாய் பாபாவை போற்றும் "சாய்ராம்" பக்தி பஜனை பாடல்களை தொகுத்து பதிவு செய்திருக்கும் பக்கம் இது.

(IV). இணையம் மூலம் புகழ்பெற்று புதிய பாதை கண்டவர்களை "இனைய வழிகாட்டியாக" அடையாளம் காட்டும் தொகுப்புப் பகுதி :-(இணையம் ஏற்படுத்தி தந்த வாய்ப்புகளையும் அது திறந்து விட்ட புதிய கதவுகளையும் பயன்படுத்திக்கொண்டு தங்களை வெளிப்படுத்திக்கொண்டு முன்னுக்கு வந்த சாமான்யர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்).:-
1. கல்வி கடன் பெற வழிகாட்டும் இணையதளம்:-
கல்விகடன் தொடர்பான தகவல்களை பெறவும், கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கவும் உதவும் இணையதளத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் வழிகாட்டியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வித்யாலக்‌ஷ்மி (https://www.vidyalakshmi.co.in) எனும் பெயரிலான இந்த இணையதளம் சுதந்திர தினத்தன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை NSDL-என்.எஸ்.டி.எல். இ-கவர்னன்ஸ் அமைப்பு நிறுவி பராமரிக்க உள்ளது.மாணவர்களின் கல்வி கடன் தேவை தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் அளிக்கும் நோக்கத்துடன் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்படிப்பிற்காக கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் இந்த தளத்தில் பதிவு செய்து கொண்டு விண்ணப்பிக்கலாம். ஒரே விண்ணப்பம் மூலம் பல வங்கிகளுக்கு விண்ணபிக்க முடியும். மாண்வர்கள் கல்வி கடன் விண்ணபங்களையும் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

13 வங்கிகள் தங்களது 22 கல்வி கடன் திட்டங்களை இந்த தளத்தில் இடம்பெற வைத்துள்ளன. 5 முக்கிய வங்கிகள் தங்கள் அமைப்பை இந்த தளத்துடன் இணைத்துள்ளன.
இதே போல மத்திய அரசு வழங்கும் கல்வி ஊக்கத்தொகை தொடர்பான தகவல்களையும் பெற முடியும்.
கல்வி கடன் தொடர்பான தகவல்களை பெறவும், விண்ணப்பிக்கவும் வழி செய்யும் இந்த வகையான இணையதளம் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் கடனுக்கான விண்ணப்பங்களின் நிலை குறித்த தகவலையும் இதன் மூலம் தெரிவிக்கும் வசதி உள்ளது. மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களின் நிலை மற்றும் சந்தேகங்கள் குறித்து இ-மெயில் மூலம் கோரிக்கை அனுப்பி விவரங்கள் பெறலாம்.
இணையதள முகவரி: https://www.vidyalakshmi.co.in

2. புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்:-
புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம்.
புதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியயது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம்.

அதாவது, இணையதளங்களை எந்தவித வரையறைக்கும் உட்படுத்தாமல்,ஒவ்வொரு தளமாக எட்டிப்பார்க்க செய்கிறது. இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் இதன் முகப்பு பக்கத்தில் உள்ள, என்னை பயனுள்ள இணையதளத்திற்கு அழைத்துச்செல்லவும் எனும் கட்டளைக்கு கீழ் இருக்கும் பட்டனை கிளிக் செய்வது தான் – கிளிக் செய்ததுமே தானாக ஒரு டேப் ஓபனாகி அதில் புதிய இணையதளம் தோன்றுகிறது.
இப்படி ஒவ்வொரு முறை கிளிக் செய்யும் போது புதிய இணையதளத்துடன் புதிய டேப் ஓபனாகும். அடுத்த வரும் தளம் என்னவாக இருக்கும் , எந்த வகையை சேர்ந்ததாக இருக்கும் என்று தெரியாது;ஆனால் பயனுள்ளதாக இருக்கும்.

புதிய தளங்களை அறிமுகம் செய்து கொள்வது என்பதே இணையத்தில் மூழ்கி முத்தெடுப்பது போலதானே. இந்த கண்டறிதலை கொஞ்சம் புதுமையான முறையில் சாத்தியமாக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ .
பயன்படுத்திப்பாருங்கள்; பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
புதிய தளங்களை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த தளத்தில் இடம் பெறக்கூடியது என நீங்கள் தரும் இணையதளங்களையும் சமர்பிக்கலாம்.

டான் வாக்கர் மற்றும் மாட் கார்பெண்டர் ஆகிய இரு மென்பொருளாளர்கள் உருவாக்கியுள்ள இந்த தளம் தான் இப்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரை கவர்ந்துள்ளது.
இணையதள முகவரி: http://randomusefulwebsites.com/

(V). இந்த மாத "முகநூல் சுவற்றின் சித்திரங்கள்" தொகுப்புப் பகுதி :-
1. https://www.facebook.com/AVVAITAMILSANGAM (அவ்வை தமிழ் சங்கம் முகநூல் பக்கம்:- உத்திரப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களின் நலனுக்காக, எல்லோரையும் இணைக்கும் பாலமாக செயல்பட விரும்பும் ஒரு அமைப்புதான் அவ்வை தமிழ் சங்கம். பல வேறுபட்ட நிகழ்ச்சிகளின் மூலம் எல்லோரையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்து ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும், நம்மிடம் இருக்கும் திறமைகளை மற்றவர்க்கு வெளிக்காட்டும் ஒரு மேடையாகவும் விளங்குகிறது நமது "அவ்வை தமிழ் சங்கம்").

2. https://www.facebook.com/groups/945285868864703/ (தமிழ் திரையில் இயல் இசை நாடகம்:- நூற்றாண்டை கொண்டாடும் தமிழ் திரையில் இயல் இசை நாடகம் பற்றிய பல விவரங்களைக் இங்கு காணலாம்... திருமதி.கோதை தனபாலன் அவர்கள் இந்த முகநூல் பக்கத்தை நிறுவி, உபயோகமான பல விவரங்களால் சிறப்பாக இந்த முகநூளின் சுவற்றை அலங்கரித்து வருகிறார்மேலும் அவரது கவிதைகளால் இந்த http://natchiark.blogspot.in/ வலைப்பக்கத்தையும் அலங்கரித்திருக்கிறார்...(விருப்பமுடையவர்கள் இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து பயன்பெறலாம்.)

3. https://www.facebook.com/vaanoli.mandram (முகநூளில் தமிழ் வானொலி மன்றம்:- பல்வேறு சர்வதேச தமிழ் வானொலி நிலையம் மற்றும் வானொலி நிகழ்சிகள் பற்றிய விவரங்களைக் இங்கு காணலாம்).

4. https://www.facebook.com/Programmedirectors (நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை) நீங்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளராக எந்த நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக நடத்த இந்த முகநூல் பக்கம் உங்களுக்கு பல அனுபவங்களை கற்றுத்தரும் முகநூல் பட்டறை, மேலும் இது நமது வாசகர் வட்டத்தின் நிகழ்ச்சி தயாரிப்பு பற்றிய பயிற்சிப் பட்டறை பக்கம். 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முகலூல் பக்கத்தில் பல நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த விவரங்கள் மற்றும் சிறப்பான பல நிகழ்சிகள் பற்றிய தொகுப்புக்களும் இடம்பெற்றுள்ளது.

5. https://www.facebook.com/groups/945285868864703/ வாட்ஸ்-அப் கவிதைகள்:- முகநூளில் கொலுசு மாத மின்னிதழின், கைத்தொலைப்பேசியின் வாட்ஸ்-அப் அளவிலான குட்டிக் கவிதைகளை வாசிக்கவும், இந்த முகநூல் சுவற்றில் உங்களின் கவிதை இடம்பெறவும் இந்த "வாட்ஸ்-அப் கவிதைகள்" பகுதியில் உங்களை இணைத்துக்கொள்ளலாம்.

இந்தப் பகுதி உங்களுக்கு எந்த அளவில் பயனுள்ளதாக அமைந்தது என்பதை குறிப்பிடுங்கள். இந்த பகுதி மேலும் சிறப்படைய, உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள் ... நன்றிகளுடன் இந்த மாத இனைய பக்க தொகுப்பாசிரியர்-A.K.Pavithra. 

No comments:

Post a Comment