வைஷாலி வாசகர் வட்டம்: இலவச தமிழ் பயிற்சியில் சேர உற்சாகப்படுத்துங்கள்...

FREE JOBS - JUST CLICK HEAR

Saturday 28 May 2016

இலவச தமிழ் பயிற்சியில் சேர உற்சாகப்படுத்துங்கள்...

தமிழகம் அல்லாத பிற மொழி பேசும்வெளி மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் வாழும் புதிய இளைய தலைமுறையினருக்காக தமிழ் வகுப்புக்கள்....

பேராசிரியர் டாக்டர் மா.நன்னன் அவர்களின் தமிழ் ஆராய்ச்சி புத்தக குறிப்புகளின் புதிய எளிய முறையில் தமிழ் எழுத படிக்க கற்றுக்கொள்ளுங்கள். 


புதிய, எளிய வரி எழுத்துக்களைக் கொண்டு தொடங்கும் வகையில், எளிய முறையில் முதல் எழுத்து "ட" அடுத்து "ப" என வல்லினத்தில் ஆரம்பித்து, தொடர்ந்து "ய" என்கிற இடையினம் மற்றும் "ம" என்கிற மெல்லின எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட புதிய முறையில் எளிமையாக தமிழ் கற்றுக்கொள்ளும் வகுப்புகள் 

(அ-என்கிற உயிர் எழுத்திலிருந்து ஆரம்பித்து, கையைப்பிடித்து எழுதக் கற்றுக் கொடுக்க வேண்டி இருப்பதால், தமிழ் கற்ப்பது மிகவும் கடினம் என்று முதல் வகுப்பிலேயே ஓடி விடுகிறார்கள்). 

ஆகவே புதிய இளைய தலைமுறையினருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்பதைவிட, எதோ ஒரு முறையில் தமிழை எழுத படிக்க கற்றுக்கொடுப்பது சிறப்பு.) எனவே ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில் தொடங்கும் நமது NCR-NEW DELHI- வைஷாலி வாசகர் வட்ட தமிழ் வகுப்புகளில் கலந்துகொள்ளுங்கள். தமிழ் எழுத படிக்கத் தெரியாத, கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களை இந்த இலவச தமிழ் பயிற்சியில் சேர உற்சாகப்படுத்துங்கள்... 

நன்றி, வாழ்க தமிழ்.

No comments:

Post a Comment