வைஷாலி வாசகர் வட்டம்: வை.வா.வி.வ-3ம் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள்...

FREE JOBS - JUST CLICK HEAR

Thursday 7 April 2016

வை.வா.வி.வ-3ம் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள்...

வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்-NCR-NEW DELHI.  
நமது வாசகர்வட்டத்தின் 3வது வருட ஆண்டுவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியாக வருகிற (சித்திரை தமிழ் மாதம்)ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை   அன்று வைஷாலி செக்டர்-4 இல் இருக்கும் "தஸ் மஞ்சில்" என்று அழைக்கப்படும் 10 அடுக்கு மாடி கட்டிட (வருமானவரி குடியிருப்பு)  பகுதியில் அமைந்த சிவன் கோவில் வளாகத்தில்  காலை  10 மணியிலிருந்து நடைபெறவிருக்கும் வைஷாலி வாசகர் வட்ட நிகழ்ச்சியில் நம்மோடு உத்திரப் பிரதேச அவ்வை தமிழ் சங்கமும் இணைந்து பல்வேறு பரிசுப் போட்டிகள் மற்றும்  கலை நிகழ்சிகளும் நடக்கவிருப்பதால் அனைவரும் அன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நமது வைஷாலி வாசகர்  வட்ட நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். 

வழக்கம்போல நமது வாசகர் வட்ட நிகழ்ச்சியில் :- 
முதலில் எங்க வீட்டு "நூலகம்" பகுதி .... (புது புத்தக வரவு)
தொடர்ந்து ......திடீர் தலைப்பை கொண்ட 
0. திருக்குறள் போட்டி 
1. பேச்சுப்போட்டி 
2. பாட்டுப்போட்டி 
3. கதைப்போட்டி 
4. கவிதைப்போட்டி
5. கட்டுரைப் போட்டி  
6. புகைப்படப் போட்டி 
7. சித்திரப் போட்டி,
8. சிரிப்புப் போட்டி,
9. "சரித்திரம் முக்கியம்" பகுதி....
10. "கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"- பயிற்சி வகுப்பில் இந்தமாதம் ?????   
11. வழக்காடு மன்றம் அல்லது பட்டி மன்றம். அல்லது குழுப் போட்டி.
12. "வை.வா.வி.வ- இனைய பூவிதழ்" - இதழின் இந்த மாத ஆசிரியர்?  பகுதி....... மேலும் பல ....


இப்படிக்கு  வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்-NCR-NEW DELHI. 

No comments:

Post a Comment