வைஷாலி வாசகர் வட்டம்

FREE JOBS - JUST CLICK HEAR

Sunday 19 February 2017

"மாசி மாத-சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்".

மாசி மாத சுட்டீஸ் குல்கந்து இதழின் http://gulkanthu.blogspot.in/ சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்".
படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் - பிப்ரவரி-2017 மாசி-மாதம் அன்பு/ நட்பு/ குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-11.



சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-03-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

முழு விவரங்கள் வைஷாலி வாசகர் வட்ட மாசி மாத சுட்டீஸ் குல்கந்து இதழின் "http://gulkanthu.blogspot.in" வலைப்பதிவில் காண்க.


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....

Wednesday 15 February 2017

சென்ற மாத ஆறு- வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை & பரிசு.

சென்ற மாத ஆறு- வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை:- "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-10  சனவரி-2017 தை-மாதம் "பொங்கலோ பொங்கல்"  நன்றி கூறும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்- வலைப்பதிவு இதழ் போட்டி என்-10 ஆறு- வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை
1) காகித தோரணம்  2) வானத்தில் பறவைகள் பறப்பது 3) மாட்டின் நெற்றியில் குங்குமப்பொட்டு 4) விவசாயியின் சட்டை  5) பொங்கல் பானை கைக்கரண்டி 6) வழக்கமான ஓவியம் வரைந்தவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கையொப்பத்தில் வட்டம் அல்லது பெயரின் கீழ் கோடிட்டு காட்டுதல்.  

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 34 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=12, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=10, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=12, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....

Wednesday 8 February 2017

வைஷாலி வாசகர்வட்ட 36வது சந்திப்பு, மாசி மாதம்:- அன்பு/நட்பு/குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.

மாசி மாதம்:- வைஷாலி வாசகர்வட்ட 36வது சந்திப்பு,  அன்பு/நட்பு/குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும்நிகழ்ச்சிகளும்.
"வாசிப்பு என்பது புத்தகத்திற்கு மட்டுமில்ல வாத்தியக் கருவிகளுக்கும் பொருந்தும் ....வாசிப்போம்.... சுவாசிப்போம்" வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 36வது வாசகர் வட்ட சந்திப்பு 19-02-2017 தேதி, 3-வது ஞயிறு அன்றய மாசி மாதம்:- அன்பு / நட்பு / குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும். நமது  வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 03.00 மணிக்கு தொடங்கும்... 

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை. இந்த சிறப்புகளெல்லாம் அந்த மாதங்களில் அமையும் சிறப்புவாய்ந்த நாட்களை நினைவுகூறுமாறு, வழிபாடுகளையும்,  திருவிழாக்களையும் கொண்டே அமைகின்றன. அவ்வகையில் மாசி மாதத்தின் சிறப்பு சிலவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

பிப்ரவரி மாதம் (BOOK LOVERS MONTH) புத்தகக் காதலர், புத்தகப் பிரியர்களின் மாதமாக கொண்டாடப்படுவதால் பல புத்தக பதிப்பகத்தினர், மற்றும் புத்தக விற்பனையாளர்கள் பிப்ரவரி மாதம் முழுவதும் புத்தகங்களை வாங்கும் நண்பர்களுக்கு சிறப்பு கழிவு, தள்ளுபடிவிலையில் மற்றும் இலவச புத்தக இணைப்புகளையும் தருகிறார்கள் நீங்களும் உங்களுக்குத் பிடித்த புத்தகங்களை மிகக் குறைந்த விலையில் பெற்று பயனடையுங்கள் ...மேலும் காதலர் தினம்தான்."வாலண்டைன்-தினம்" பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளவேண்டுமா வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=11 மாசி மாதம்- தேதி /நாள் 19-02-2017. பிரவரி 3வது ஞாயிறு அன்று.http://vaishalireaderscircle.blogspot.in" "எழுத்துக்களிடம் எனக்குப்  பிடித்ததே, அவை நம் கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்" என்கிறார்கள் "வாசிப்பு என்பது புத்தகத்திற்கு மட்டுமில்ல வாத்தியக் கருவிகளுக்கும் பொருந்தும் ....வாசிப்போம்.... சுவாசிப்போம்".... "சுட்டீஸ்-குல்கந்து" மாசி மாத வலைப்பதிவர் பூவிதழ்-11"http://gulkanthu.blogspot.in/"  

மாசி மாத ஆன்மீக சிறப்பு :-
@ மாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியையே ஷட்திலா ஏகாதசி என்பர். திருமாலை வழிபடுவதுதான் இந்த நாளின் முக்கியமான நோக்கம்.  

@ மாசி மாத அமாவாசை நாளில், அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும். இவ்விழாவின் அடிப்படை- சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான். 

@ திருவாலங்காட்டில்- நடராஜர் சந்நிதியின் பின்புறம் ஒரு சுவர் தடுக்கப்பட்டிருக்கும். அதனுள் காரைக்கால் அம்மையார் இருப்பதாக ஐதீகம். இதைத்தான் ஆலங்காட்டு ரகசியம் என்பார்கள். அம்மையார் இறைவனுடன் ஒன்றியது மாசி மாதத்தில்தான்.

@ மாசி மாதத்தில் நாடகம் போடுவதாக, வேடம் கட்டி ஆடுவதாக வித்தியாசமான வேண்டுதல் செய்யும் கோவில் பற்றி தெரிந்துகொள்ள வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து"  இதழ்=11 மாசி மாதம்-தேதி 19-02-2017.

மேலும் பல சுவையான விவரங்களுக்கு, குட்டி கல்கண்டு, சிறுகதை போட்டி, ஆறு வித்தியாசங்களை கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள் போன்ற பல நிகழ்ச்சிகளுக்கு வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட 36வது சந்திப்பு,  அன்பு/நட்பு/குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும். 
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
தொடர்ந்து ......

"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 
அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?.... உதவி மற்றும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....

Tuesday 10 January 2017

தை மாதம்:- வைஷாலி வாசகர்வட்ட 35வது சந்திப்பு

தை மாதம்:- வைஷாலி வாசகர்வட்ட 35வது சந்திப்பு,  நன்றி கூறும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்.


வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 35வது வாசகர் வட்ட சந்திப்பு 15-01-2017 தேதி, 3-வது ஞயிறு அன்றய தை மாதம்:- நன்றி கூறும் திருவிழாவாக தைப்பொங்கல் அமைவதனால், வைஷாலி வாசகர் வட்டத்தின் நன்றி கூறும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்..
நமது  வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 03.00 மணிக்கு தொடங்கும்... 

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
தொடர்ந்து ......

"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .


மாலை  6.00 மணிக்கு கிழக்கு புது தில்லியின் -வைஷாலி-மெட்ரோ இரயில் நிலையத்தின் எதிரில் அமைந்த ஸ்ரீ ராதா கிருஷ்ணன் கோவிலில் நடைபெறும்   நமது வைஷாலி ஐயப்ப சேவா சங்கத்தின் 17வது ஸ்ரீ ஐயப்ப மகரஜோதி பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் தாங்களும், தங்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் நபர்களுடன் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி பகவான் ஸ்ரீ ஐயப்ப சுவாமி அருளை பெறுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.... 
இடம்:- NCR-New Delhi "வைஷாலி மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில், வைஷாலி செக்டர்-4,  ஸ்ரீ கிருஷ்ணா பவனில் அமைந்துள்ள  "ஸ்ரீ ராதா கிருஷ்ணன் கோவிலில்" 
# சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 
அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?.... உதவி மற்றும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....

Friday 9 December 2016

மார்கழி மாதம்:- வைஷாலி வாசகர்வட்ட 34வது சந்திப்பு, சேவை/தான/தர்ம/உதவும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்.

மார்கழி மாதம்:- வைஷாலி வாசகர்வட்ட 34வது சந்திப்பு, சேவை/தான/தர்ம/உதவும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்.
வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 34வது வாசகர் வட்ட சந்திப்பு 18-12-2016 தேதி, 3-வது ஞயிறு அன்றய  மார்கழி மாதம்:- சேவை/தான/தர்ம/உதவும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்...  
காலை 6.00 மணியிலிருந்து  தொடங்கும் நமது வைஷாலி ஐயப்ப சேவா சங்கத்தின் 17வது ஸ்ரீ ஐயப்ப சாஸ்தா ப்ரீத்தி பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் தாங்களும் தங்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் நபர்களுடன் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தித் தருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.... 

இடம்:- NCR-New Delhi "வைஷாலி மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில், வைஷாலி செக்டர்-4,  ஸ்ரீ கிருஷ்ணா பவனில் அமைந்துள்ள  "ஸ்ரீ ராதா கிருஷ்ணன் கோவிலில்" 
# சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 
அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?.... உதவி மற்றும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....



Wednesday 23 November 2016

ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- நவம்பர்-2016-கார்த்திகை-மாதம்

கார்த்திகை மாத சுட்டீஸ் குல்கந்து இதழின் http://gulkanthu.blogspot.in/ சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "கார்த்திகை-மாத-தீபத்திருநாள் கொண்டாட்டம்" படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- நவம்பர்-2016-கார்த்திகை-மாதம் தீபத்திருநாள் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-08.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-12-2016 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
=======================================
$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-7 அக்டொபர்-2016-ஐப்பசி-மாதம் தண்ணீர் சிக்கனமும் சேமிப்பும் , வலைப்பதிவு இதழ் போட்டி என்-07. ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,
1. தகரக்கதவின் சட்டம், 2.கதவின் அருகே சுவற்றின் மீது மின் விளக்கு, 3. சிறுவன் அருகில் சோப்பு கட்டி, 4. நீர் நிரம்பும் வாலி , 5.சிறுமியின் தலையில் பூ ... என ஆறு வித்தியாசங்கள் உள்ளன.

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 23 நபர்கள்மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், (முதல்முறையாக மிக அதிகமானவர்கள் தவறான பதிலை கூறியிருந்தார்கள்.) தமிழில் விடை எழுதியவர்கள்=18, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=04, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=01, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.

Sunday 20 November 2016

"எங்க ஊரில் உள்ள குளங்களையும், ஏரியையும் காணவில்லை?????" அராஜகம், ஆக்கிரமிப்பு, ஏன் என்று கேட்க முடியாத நிலையில்.????

வைஷாலி வாசகர் வட்ட 33வது சந்திப்பு...20-11-2016 கார்த்திகை மாதம் -புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்......

இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில் பிரகாசமான ஒளி ஏற்றப்படுமேயானால் அவ்விடத்தில் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் உண்டாகும்.

20-11-2016 இன்று நமது 33-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,  

கார்த்திகை மாத வாசகர் வட்டத்தின் :-33வது சந்திப்பில் (20-11-2016) முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தொடர்ந்து கார்த்திகை மாதம் -புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்.  வாழ்க்கையை ஒளிமயமாக்கும் கார்த்திகை மாத சிறப்புகள் பற்றியும் ஒரு அலசல்.... 
"என் கேள்விக்கு என்ன பதில்?" நிகழ்ச்சியில் ... 
வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்"...
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"..  நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் ???????????  என்கிற  கேள்விக்கு ...வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ்கள் வழங்கிய "என் கேள்விக்கு என்ன பதில்? " நிகழ்ச்சியில்....மனம்திறந்து பேசினார்கள் ... 

"எங்க ஊரில் உள்ள குளங்களையும், ஏரியையும் காணவில்லை?????"  அராஜகம், ஆக்கிரமிப்பு, ஏன் என்று கேட்க முடியாத நிலையில்.. ????
முழு விவரங்களுக்கு வருகைத தாருங்கள் வைஷாலி வாசகர் வட்டாத்தின் "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் 20-11-2016 கார்த்திகை மாத இதழில் http://gulkanthu.blogspot.in/

மேலும்:- . படிக்காத தவறாதீர்கள் ...

$ சபிக்கப்பட்ட மனம் மிகுந்த "பூ" எது?   சிவனுக்குப் பிடிக்காத, பூசைக்கு உதவாத பூவாக மணம்மிகுந்த "தாழம்பூ" சாபம் பெற்றது என்று கார்த்திகை மாதத்தின் சிறப்புகளை பல்வேறு தெரிந்த புராணம் தெரியாத விவரங்கள் என திருவண்ணாமலை அண்ணாமலையாரின் தல புராண கதைகளை சுட்டீஸ் குல்கந்து தொடரில் திரு முத்து ஐயர் அவர்கள். சுவைபட எடுத்துரைக்கிறார். 

$ இந்தியாவின் முதல் படுக்கைகளுடன் கூடிய திரையரங்கில்.... மெத்தையில் படுத்துக்கொண்டே படம் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? 20-11-2016 அன்றய  கார்த்திகை மாத சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவர் இதழின் "குட்டி கல்கண்டு தகவல்கள்:-" பகுதியில்......

$ திருக்குறளை, வாழ்வதற்கு படிச்சவங்கள விட..! "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்கதான் அதிகம் ..!!!!! என 
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ்களின்  "திருக்குறள் -வம்புக்கு வாங்க" என்கிற புதிய "திருக்குறள்- பேச்சுப்போட்டி" நிகழ்ச்சியில் ...  

திருமதி. நாமகிரி சந்திரசேகர் அவர்கள் எழுதிய  சுட்டீஸ் குழந்தைகளுக்கு, கதையிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? சரியான விடையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதி. 

$ குட்டிக் கதைகள் பகுதியில் இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த  கதை :- 
1. "மாவலியோ மாவலி' என்று குழந்தைகள் கூறிக் களிப்பதேன்?

2. திருக்கார்த்திகை அன்று மாவலி சுத்துவதை செய்வது எப்படி? 

3. கார்த்திகை தீபம் அன்று கோவிலில் சொக்கப்பானை கொளுத்துவது ஏன்? காரணம் என்ன?  

4. குயவர் என்பவர் யார்? புதிதாக வாங்கும் மண்பாண்ட அகல் விளக்குகளை நாம் எப்படி பயன்படுத்தவேண்டு?

$ சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:- ஆன்மீக பழக்கங்கள்.

$ நல வாழ்வு பகுதியில்:- 1.உணவே மருந்தாக 26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை-காய்???

$ பொது அறிவுக் கதை. கட்டுரை, தகவல்கள் பகுதியில்
# சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை பற்றி உங்களுக்குத் தெரியுமா? 

$சமையல் குறிப்புக்கள் / விருந்துக்கு வாங்க பகுதியில்:-
இஞ்சிப் பால்..! அருமைப் பெருமைகள் ????

$ வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள், ஆறு வித்தியாசங்களை கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள் மற்றும் சுட்டீஸ் கதைகளின் மீதிக்கதை அல்லது கதைக்கான விளக்கம் கூறி பரிசுகளை வெல்லுங்கள்  போட்டி என்-8  கார்த்திகை மாதம், இதழ்-8 


$ "திருமதி கங்காதரன்" அவர்கள் சுட்டீஸ்களுக்கு தொகுத்துத்தரும் கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் "திருக்கார்த்திகைத்" திருநாள் பற்றிய சிறப்புக் கட்டுரை...

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....

அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். சுட்டீஸ்களின் இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... http://gulkanthu.blogspot.in/

நன்றி வைஷாலி வாசகர் வட்டம்.